தமிழர்களுக்கெதிராக இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத அறப் போராட்டம்
OMR சாலையில் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவது பற்றி திட்டமிடுகிறோம் நாம். மேலிருந்து விழும் குண்டுகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக குடிசைகளிலிருந்து வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுகிறார்கள் அவர்கள்.
இரவு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் நாம். பகலில் கடிக்க வரும் பாம்புகளிலிருந்துதப்பிக்கும் வழியறியாது அடர்ந்த வனங்களில் நித்தம் இறக்கிறார்கள் அவர்கள்.
அடுத்த வேளை KFC Chicken-ஆ அல்லது Pizza Hut-ஆ என்று நண்பர்களுடன் பேசுகிறோம் நாம். நாளைக்காவது ஒரு வேளை உணவு கிடைக்குமாஎன்று சொந்த நாட்டில் அகதிகளாகத் தவிக்கிறார்கள் அவர்கள்.
பொங்கலுக்கு ஊருக்குப் போக இரண்டு மாதங்களுக்கு முன்பே online reservation செய்கிறோம் நாம். எப்போது தாய்நாடு போவோம் என்பது குறித்துயாதொரு நம்பிக்கையுமின்றி அகதிகளாக உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் அவர்கள்.
சத்யம் சினிமா, MGM ரிசார்ட், சனிக்கிழமை இரவு கொண்டாட்டங்கள் என சுகமாய் வாழ்கிறோம் நாம். ஒவ்வொரு நொடியைக் கழிப்பதும்போராட்டமாய் வாழ்கிறார்கள் அவர்கள்.
நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள் எனில், அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?
செய்ய வேண்டியது ஆயிரம் இருப்பினும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான நமது எதிர்ப்பை, ஈழத்தமிழர்களுக்கான நமது ஆதரவைத்தெரிவிக்க ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்போம், வாருங்கள் நண்பர்களே!
நாள்: 13-டிசம்பர்-2008, சனிக்கிழமை
நேரம்: காலை 08:00 - மாலை 06:00
இடம்: கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னல் அருகில். (கோயம்பேடு - அண்ணாநகர் மார்க்கம்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி உண்ணாவிரதம்

December 10, 2008 at 9:01 pm
DEAR FRIENDS YOUGUYS DOING A GOOD JOB
December 10, 2008 at 9:05 pm
I really appreciate what you are doing,.the genocide against Eelam Tamils has been going on for so long,fair minded people all over the world should take immediate action to stop this major crime against humanity.the world should know what is going on in that so called tropical paradise which has become a hell for Tamil people.international community can’t keep a blind eye.UN should get involved and srilankan govt should be warned.big and small countries should stop aiding and abetting the srilankan govt by giving it arms and military training.
December 11, 2008 at 2:37 am
[...] தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் ஈ… – சென்னையில், வரும் சனி 13-12-2008 அன்று. அனைவரும் கலந்து கொள்ள வாரீர். [...]
December 11, 2008 at 2:47 am
[...] தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் ஈ… – சென்னையில், வரும் சனி 13-12-2008 அன்று. அனைவரும் கலந்து கொள்ள வாரீர். [...]
December 12, 2008 at 7:15 am
போராட்டக் களத்துள் கால்வைக்கும்
ஒவ்வொருவருக்கும் எனது
வாழ்த்துக்கள்
December 12, 2008 at 7:18 am
[...] மேல் தகவலுக்கு : தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் ஈ… [...]